போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் நால்வர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகசின் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, முகத்துவாரம், 75ஆம் மைல்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, தனமல்வில குகுல்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 685 கஞ்சா கன்றுகளுடன் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கண்டி, நாமல்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5
கிராம் 600 மில்லிகிராம் கஞ்சாவுடன் நாமல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam