பெருந்தொகைப் பணத்துடன் கொழும்பில் நால்வர் கைது
கொழும்பில் ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டுப் பணத்தையும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை

புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் வைத்து பொலிஸ் விசேட அதிரப் படையினரால் நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை - டெனெட் சந்தைக் கட்டடத் தொகுதி, மாளிகாவத்தை - நூரானியா சந்தி, கொழும்பு - 10 முதலான இடங்களிலுள்ள 3 தங்க ஆபரண விற்பனை நிலையங்களைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், வெள்ளவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| பொலிஸ் சார்ஜன்ட், ஒருவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தி எடுத்த தவறான முடிவு! |
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam