ரஷ்ய ஆதரவு படையினரிடம் சிக்கிய அமெரிக்க இராணுவ வீரர்களின் நிலை
உக்ரைனில் பிரிவினைவாதிகளிடம் பிடிபட்ட முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர், உக்ரைன் தரப்புக்காக போராடும் போது தான் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கூறியதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலபாமாவின் டஸ்கலூசாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் அலபாமாவின் ஹார்ட்செல்லைச் சேர்ந்த சக அமெரிக்கரான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் இந்த மாதம் கார்கிவ் அருகே சண்டையிடும் போது காணாமல் போனார்கள்.
எனினும், குறித்த இருவரும் ரஷ்ய ஆதரவுப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை நிராகரிக்க முடியாது
இந்நிலையில், உக்ரைனில் தனது சண்டை அனுபவம், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்க்கு வெளியே பிடிபட்ட நாள் வரை மட்டுமே இருந்தது என RIA செய்தி நிறுவனத்திற்கு அளித்த வீடியோ நேர்காணலில் அலெக்சாண்டர் ட்ரூக் தெரிவித்துள்ளார்.
"இங்கே எனது போர் அனுபவம் அந்த ஒரு நாளில் அந்த ஒரு பணியாகும் என அவர் கூறினார். "நான் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
2014 முதல் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட ரஷ்ய பினாமிகள் வைத்திருக்கும் பிராந்தியத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், பிடிபட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதை நிராகரிக்க முடியாது என்று கிரெம்ளின் கூறியுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களின் உறவினர்கள், அவர்கள் கூலிப்படையினர் அல்ல என்றும், ரஷ்யப் படைகளை விரட்ட ஏப்ரலில் தன்னார்வலர்களாக உக்ரைனுக்குச் சென்றதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam