சட்டவிரோத பௌத்த விகாரை அமைதியை கொண்டுவராது! முன்னாள் எம்.பி. சுரேஷ் தெரிவிப்பு

Jaffna Suresh Premachandran Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Theepan Dec 29, 2025 07:19 AM GMT
Report

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது எனவும், இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிக்காது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிஸ்டம் சேஞ்சை முன்வைத்து ஆட்சிப்பீடம் 

சிஸ்டம் சேஞ்சை முன்வைத்து ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இடதுசாரி ஜனநாயகம் பேசும் இன்றைய அரசு அத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நாட்டின் நிலையான அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சட்டவிரோத பௌத்த விகாரை அமைதியை கொண்டுவராது! முன்னாள் எம்.பி. சுரேஷ் தெரிவிப்பு | Former Mp Suresh Replied Report Goverment

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் அடாத்தாகப் பிடித்த பல காணிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பொழுது ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் சட்டவிரோதமாகக் கட்டப்படும் புத்தவிகாரைசளை இன்னும் ஆதரித்து செயற்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பறிமுதல் செய்து, தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, சட்டவிரோதமான முறையில் ஒரு பௌத்த ஆலயம் கட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

காணிகள் விகாரைக்கு உரித்தானதல்ல

நயினாதீவில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி, இந்தக் காணிகள் விகாரைக்கு உரித்தானதல்ல என்பதையும், அதில் கட்டப்பட்டிருக்கும் விகாரை சட்டவிரோதமானது என்பதையும், தமிழ் மக்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதையும், அவர்கள் தம்முடன் அன்புடன் பழகுகிறார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதுடன் ஐம்பத்து மூன்று வருடங்களாக தாம் இந்தப் பிரதேசத்தில் வசித்து அந்த மக்களுடன் பழகி வருகின்றேன் என்ற அடிப்படையிலும், தையிட்டி நாகவிகாரை கட்டுமானமானது சட்டவிரோதமானது என்றும் சிங்கள மக்களுக்குச் சிங்கள மொழிமூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கின்றார். 

சட்டவிரோத பௌத்த விகாரை அமைதியை கொண்டுவராது! முன்னாள் எம்.பி. சுரேஷ் தெரிவிப்பு | Former Mp Suresh Replied Report Goverment

நிலைமை அவ்வாறிருக்க, சட்டவிரோதமான விடயங்களை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் சட்டரீதியாக அந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கொடுப்பதை விடுத்து, தொடர்ந்து அந்த மக்களுடன் பேரம் பேசுவதும் வேறிடத்தில் காணிகள் தருகிறோம் என்று கூறுவதும் சட்டவிரோதத்திற்குத் துணைபோவதாகவே பொருள் கொள்ளப்படும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல இடங்களில், புராதான பௌத்த சின்னங்கள் இருக்கின்றன என்ற பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புத்த கோயில்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இது பௌத்த நாடு, நாங்கள் விரும்பிய எதனையும் செய்யலாம் என்ற மனோபாவத்துடன் பெரும்பாலான புத்த பிக்குகளும் படையினரும் அவர்களுக்கு சாதகமான அரசியல்வாதிகளும் செயற்பட்டு வருவதானது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகமானது என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் சாசனம்

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் சாசனத்தில் பௌத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோரே மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மிக சொற்பமான அளவில் சிங்கள பௌத்த மக்களும் வாழ்கிறார்கள்.

ஆகவே, அத்தகையதோர் பிரதேசத்தில் பௌத்தத்திற்கு முதலிடம் இருக்க வேண்டும் என்பது ஜனநாயகபூர்வமானதுமல்ல நியாயமானதுமல்ல.

வடக்கு, கிழக்கில் தற்பொழுது கட்டப்பட்டு வரும் புத்தகோயில்களின் சுற்றாடல்கள் அனைத்துமே தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். இந்தப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் எவருமே கிடையாது.

இவ்வாறான இடங்களில் புத்தகோயில்களைக் கட்டுவதென்பது புத்த பெருமானை அவமதிப்பதும் பௌத்தத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயலுமாகும்.

உங்களது இந்தக் கட்டுமானங்கள் அனைத்தையும் நோக்குகின்றபோது வடக்கு--கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற உங்களது நோக்கம் எங்களுக்குப் புரிகின்றது.

ஒருபுறத்தில் சமத்துவம், சகோதரத்துவம், இனங்களுக்கிடையில் ஐக்கியம் பற்றிப் பேசும் உங்கள் அரசாங்கம், இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் துணைபோவதென்பது நீங்கள் பேசுகின்ற விடயங்களை நிர்மூலமாக்குமே தவிர, நாட்டில் ஐக்கியத்தை உருவாக்காது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் என்றுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை

வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

மேலதிக தகவல் - ராகேஸ்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US