ஜனாதிபதியிடம் மீண்டும் பதவி கேட்கும் முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் பலர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்குமாறு கேட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
முறைப்பாடுகள்

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு தங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் அமைச்சு பதவிகள் இன்றி தங்களால் சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக ஜனாதிபதியிடம் முறைப்பட்டுள்ளனர்.
எனவே குறைந்தபட்சம் தங்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளையேனும் வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதில்

இராஜாங்க அமைச்சு பதவிகள் தொடர்பாக எந்தவொரு உத்தரவாதமோ, இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படும் தினம் குறித்த உறுதிமொழியோ ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam