கடத்தல் வழக்கொன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த குற்றமற்றவர் என தீர்ப்பு
கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக நிசாந்த உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நிசாந்த உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்து அவர்களை விடுதலை செய்துள்ளது.
காலி உயர்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஜீ.எஸ். நிஸ்ஸங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக்கு வழக்குத் தொடுனர் தரப்பு உரிய சாட்சியங்களை சமர்ப்பித்து நிரூபிக்கத் தவறியதனால் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி நபர் ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தியே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.