விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சென்னையில் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்தி, வருமானத்தை ஈட்டியதாக கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர், சற்குணம் என்ற சபேசன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சற்குணம், இந்தியாவில் விடுதலைப்புலிகளது, அனுதாபிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
போராளி அமைப்பின் மறுமலர்ச்சிக்காக, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு திருப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் முறைப்பாட்டின் கீழ், ஆறு இலங்கை பிரஜைகள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூலை முதலாம் திகதி இந்திய தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் திகதி, மீன்பிடி கப்பலான ரவிஹான்சியில் ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam