இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்
இலங்கை அணியின் பயிற்சியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் பாரத் அருண் இலங்கைக்கு வரவழைக்கப்பட உள்ளார்.
அதேவேளை, களத்தடுப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சிகளை வழங்கி இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் சபை குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
விருது வழங்கும் திட்டம்
மேலும், இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக விருது வழங்கும் திட்டம் ஒன்றையும் இலங்கை கிரிக்கெட் சபை நடைமுறைப்படுத்தவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
