புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான அடிப்படைப் பணிகள் நிறைவு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளுக்கான முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கையை எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று (18.01.2024) ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அடிப்படைப் பணிகள் நிறைவு
மேலும் தெரிவிக்கையில், புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதற்கான உள்கட்டமைப்புகள் தற்போது தயாராகி வருகிறது.
குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri