நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் அழைப்பு: ஜனாதிபதி விசேட உத்தரவு
நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
குறித்த கட்டளை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (03.03.2026) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை பேணும் நோக்கில் இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam