இந்திய மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான தூதராக செயற்பட்ட, தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாவில் இணைந்து இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அவர் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
61 வயதான சந்து, ஜூன் 1ஆம் திகதி பஞ்சாப்பில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக அமிர்தசரஸில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
சொத்து மதிப்பு
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபாய் என்று அறிவித்துள்ளார்.
மேலும், தனக்கும் தமது மனைவிக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முறையே 10.88 கோடி மற்றும் 29.04 கோடி ரூபாய்கள் என்று அறிவித்துள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
