பூவரசன்தீவில் கைக்குண்டுடன் முன்னாள் இராணுவ வீரரொருவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ராசிக் பரீட் பர்ஹான் (29 வயது) எனவும் தெரியவருகின்றது.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் கணவரான முன்னாள் இராணுவ வீரர் தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்தியதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் கைக்குண்டை தமது கண்காணிப்பின் கீழ் எடுத்துள்ளதாகவும், கைக்குண்டு இருக்கும் இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதியைப் பெற உள்ளதாகவும், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
