உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்!
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (05.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், "வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யானை சின்னம்
அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த தேசிய அரசாங்கத்திலே அவர்களுடைய கோரிக்கைகள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு இனவாதமாக மதவாதமாக முன்வைத்து அவருடைய பிரசாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக முஸ்லிம் சமூகம் இம்முறை வித்தியாசமான முடிவை எடுக்குமளவுக்கு மாறியுள்ளது.
நீண்ட காலமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்திலே போட்டியிடுவதற்கான அதிக வேட்பாளர்களின் ஆர்வம் உள்ளது.
கூடுதலான தமிழ் சிங்கள முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சிறுபான்மை சமூகமும் இணைந்து இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சாரபில் சபைகளை கூடுதலாக தெரிவு செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் ஆட்சி மன்றங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஐந்து உள்ளூராட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சி இந்த உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை” என்றார்.

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri
