வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம், மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300-ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மீளக்குடியமர்த்த தடை
இதன்போது, கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில், அதற்கு வனவள திணைக்களம் தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பு
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர், குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.
அந்தவகையில், மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது, பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்றார்.
பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
விடுவிக்க முடியாத நிலையில் இருக்கும் 5 குளங்கள்
இதற்கு கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வனவளத்திணைக்களம் தொடர்பாக இங்கு கதைப்பதில் எந்தவித பிரிவோசனமும் இல்லை.

இவ்வாறு கலந்துரையாடப்படும் விடயங்கள் எவையும் நடைபெறுவதில்லை என்று விசனம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள 17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 24 குளங்கள் தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan