வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை

Vavuniya Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Thileepan Feb 28, 2026 05:56 AM GMT
Report

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம், மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300-ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து அதிரடி காட்டும் தங்க விலை: பெறுமதி குறையுமென காத்திருப்பவர்களுக்கான செய்தி

தொடர்ந்து அதிரடி காட்டும் தங்க விலை: பெறுமதி குறையுமென காத்திருப்பவர்களுக்கான செய்தி

மீளக்குடியமர்த்த தடை

இதன்போது, கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில், அதற்கு வனவள திணைக்களம் தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பு

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர், குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.

அந்தவகையில், மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது, பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்றார்.

பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்க முடியாத நிலையில் இருக்கும் 5 குளங்கள்

இதற்கு கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வனவளத்திணைக்களம் தொடர்பாக இங்கு கதைப்பதில் எந்தவித பிரிவோசனமும் இல்லை.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இவ்வாறு கலந்துரையாடப்படும் விடயங்கள் எவையும் நடைபெறுவதில்லை என்று விசனம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள 17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 24 குளங்கள் தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் மதிப்பு! வாகன இறக்குமதியில் பதிவான திடீர் மாற்றம்

வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் மதிப்பு! வாகன இறக்குமதியில் பதிவான திடீர் மாற்றம்

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US