கொழும்பு - கோட்டையிலிருந்து தொடருந்தில் பயணித்த வெளிநாட்டவர் உயிரிழப்பு
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற உடரட மெனிகே தொடருந்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இன்று (03) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உடரட மெனிகே தொடருந்தில் எல்ல பகுதிக்கு சென்ற போதே சுரங்கப்பாதையில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிப்பு
நானுஓயா மற்றும் இதல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 19 ஆவது தொடருந்து சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் தொடருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |