அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி
தனது தொலைந்து போன பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், கிரிகோரியன் மரின் (Grigoryan Marin) என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விரைவான நடவடிக்கை
இதன்படி, கடந்த அக்டோபர் 20ஆம் திகதியன்று மரின் இலங்கையை வந்தடைந்தார்.
இதன்போது, விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை என்று முறையிட்டதை அடுத்து, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவரிடம் இருந்து நீதிமன்றால் 600,000 ரூபாய் இழப்பீடும் அறிவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஒன்றின் மூலம் வெளிநாட்டு பயணியான மரின் நன்றி தெரிவித்;துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 8 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
