வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும்,இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.