யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் சீன தேசியக் கொடி ஏற்றப்பட்டிருப்பது தெரியாது - வெளியுறவு அமைச்சகம்
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் சீன தேசியக் கொடி ஏற்றப்பட்டிருப்பது தமக்கு தெரியாது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சீன கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் சீனக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் இதுவரை வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சாதாரண சூழ்நிலைகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தேசியக் கொடிகளை தங்கள் வளாகத்தில் ஏற்றக்கூடாது அவர் கூறியுள்ளார்.
எனினும் தாய் நாடு ஒரு செயல்பாடு அல்லது நிகழ்வு போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் தேசியக் கொடிகள் வளாகத்தில் ஏற்றப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த சம்பவம் அந்த பகுதிக்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்பின் அதிகார எல்லைக்கு உட்பட்டது.
எனவே இந்த விடயத்தை யாழ்ப்பாணத்தின் பொறுப்பான உள்ளாட்சி அமைப்பு கவனிக்க வேண்டும், வெளியுறவு அமைச்சகம் அல்ல என்ற தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.