கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு யுவதி கைது! வெளியான காரணம்
தென் அமெரிக்காவின் சூரினாம் நாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ கிராம் கொக்கேய்னை இலங்கை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சர்வதேச விமான நிலையம்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த 26 வயதான குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து அவர் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் பிரேசிலில் இருந்து கத்தாருக்குப் பயணம் செய்து, பின்னர் கத்தார் ஏர்வேஸ் மூலமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
13 கோடி ரூபா
உணவுப் பொருட்கள் என பெயரிடப்பட்ட ஐந்து தகரப்பேணிகளுக்குள் அவர் எடுத்து வந்த கொக்கேய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கேய்னின் சந்தை மதிப்பு சுமார் 13 கோடி ரூபாவாகும். இதனையடுத்து குறித்த பெண், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
