பாரியளவில் குறைந்த இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு
இலங்கை மத்திய வங்கியிடம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி எப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த மார்ச் மாதம் அந்த செலாவணியின் மொத்த கையிருப்பு 1.9 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில் சீனா அந்நிய செலாவணி கைமாற்று வசதியாக வழங்கிய தொகையை கழித்தால், பயன்படுத்தக் கூடிய எஞ்சி இருக்கும் தொகையானது 200 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது.
அத்துடன் நாட்டுக்கு தேவையான ஏனைய அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக டொலர்கள் வெளியிடப்பட்டதால்,கையிருப்பில் இருக்கும் 200 மில்லியன் டொலர்களும் குறைந்துள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது பாரியளவில் குறைந்துள்ளதாக பொருளியல் மற்றும் நிதியியல் தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தினமும் மதிப்பிழந்து வரும் இலங்கை ரூபாயை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam