முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜேம்ஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட இறுதி போட்டி
அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது, நேற்று (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியை
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தியுள்ளது.
போட்டியின் முடிவு
இந்த போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடாத்தியுள்ளன.
அதற்கமைய, போட்டி நிறைவில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் 2-0 என்ற கோல்கணக்கில்
போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டுள்ளனர்.
அதேவேளை, போட்டியின் விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








காணி நிலம் வேண்டும் பராசக்தி 22 மணி நேரம் முன்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan
