முல்லைத்தீவில் காற்பந்தாட்ட இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட 16 அணிகள்
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 16 அணிகள் காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் நேற்று (02.04.2024) இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும் பெண்கள் பிரிவிலிருந்து 8 அணிகளுமாக 16 அணிகள் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதி சுற்றுப் போட்டி
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் மார்ச் மாதம் 9ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் 16ஆம் திகதியும் யாழ். மாவட்டத்துக்கான தகுதிகாண் போட்டிகள் 22ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி இறுதி சுற்றுப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு வலயக்கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் ப.சுரேஸ்குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







காணி நிலம் வேண்டும் பராசக்தி 21 மணி நேரம் முன்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
