பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை
பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக அந்நாட்டின் சில்லறை வர்த்தக அமைப்பான 'BRC' எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே பிரித்தானிய மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகளின் அதிகரிப்பால் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் விலை 4.2 சதவீதத்தில் அதிகரிக்க இருப்பதால், மக்களின் சுமை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
கடந்த ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் விளைவே இந்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு என 'BRC' சுட்டிக்காட்டியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் படி, பணி வழங்குவோர் தேசிய காப்பீடு அதிகரிப்பு, தேசிய வாழ்வாதார ஊதியம் மற்றும் பேக்கிங் வரிகள் என, 2025இல் சில்லறை வர்த்தகர்களுக்கு சுமார் 7 பில்லியன் பவுண்டுகள் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில், உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
