குறைவடையும் கோழி இறைச்சியின் விலை
மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1,200 ரூபாவாக குறைக்க முடியும் என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாவு வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன் நுகர்வோருக்கு
இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri