யாழிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் எலி எச்சங்களுடன் உணவுபொருட்கள்
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்போது, வண்டு மொய்ந்த உணவுப்பொருட்களையும் காலாவதி கடந்த உணவுப்பொருட்களையும் எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்களையும் பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றின் அறிவிப்பு
இதற்கமைய, வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
அதேவேளை, வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக வழக்ககு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் , பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் , 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
