நாடாளுமன்ற நாகரிகத்தை முறையாக பின்பற்றவும்: சபாநாயகர் அறிவுரை
"நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரிகத்தை முறையாகப் பின்பற்றவும்.” என ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardana) இன்று சபையில் வைத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும்போது, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதனைச் சரிவரச் செய்துள்ளேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |