முல்லைத்தீவில் இடம்பெற்ற நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு
முல்லைத்தீவு (Mullaitivu) குமுழமுனை மகாவித்தியாலயத்தில் நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (27.04.2024) மாலை நடைபெற்றுள்ளது.
கலாபூஷணம் கந்தப்பிள்ளை சண்முகத்தினால் தொகுக்கப்பட்டுள்ள நாட்டார் பாடல்களினை இறுவட்டு வடிவில் முழவம் கலையகம் வெளியிட்டு வைத்துள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர்நிலை அரச உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |