சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் பனிமூட்டமான காலநிலை! அவதியில் மக்கள்
கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சீரற்ற காலநிலை
குறிப்பாக நுவரெலியா ஹட்டன், நுவரெலியா கண்டி மற்றும் நுவரெலியா பதுளை போன்ற பிரதான வீதிகளிலும் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, கந்தபளை, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் நுவரெலியாவில் முக்கிய பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருகைத் தரும் புதிய வாகன சாரதிகள் தமது வானத்தின் முன்பக்க விளக்குககளை ஒளிரச்செய்து அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டுமென்று போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை நுவரெலியாவில் கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.







குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri