வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் ஆப்பிரிக்கா : தொடரும் உயிரிழப்புக்கள்
தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 21 போ் உயிரிழந்துள்ளனர்.
க்வாஸுலு - நடால் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக லேடிஸ்மித் கிராமமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
மீட்பு பணிகள்
நத்தார் தினம் முதல் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கில் 1400 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், இதுவரை 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்தும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 440 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
