வாத்துவைக் கடலில் மிதக்கும் பாரிய முதலை! அச்சத்தில் பொதுமக்கள்
தென்னிலங்கையின் வாத்துவைக் கடற்கரையோரமாக கடலில் மிதந்து திரியும் பாரிய முதலை காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
நேற்று(07.06.2023) மாலை குறித்த முதலை அப்பிரதேசத்தில் மிதந்து திரிவதை நேரில் கண்ட பொதுமக்கள், முதலை சுமார் 12 அடிக்கும் கூடுதலான நீளம் கொண்டதாகும் என்று தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
வாத்துவை, மொல்லிகொட, தல்பிடிய மட்டுமன்றி பாணந்துறை அருகே பின்வத்தை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் பொதுமக்கள் குறித்த முதலையைக் கண்டுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிஸார், கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பாக நடமாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னரும் இப்பிரதேசங்களில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri