ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற வியாழேந்திரன்
மட்டக்களப்பில் அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் பற்றிய முன்னுக்குப் பின் முரணான பல கருத்துக்களை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்து வருவதாக பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்று அறிவதற்காக ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரை வழிமறித்து வினவ முற்பட்ட போதும் அவர் ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.
ஊடகவியலாளர்கள் வாகனத்தை மறித்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அங்கிருந்து வாகனத்தில் நிற்காது சென்றுள்ளார்.
இந்த நிலையில் தமது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வியாழேந்திரன் வாகனத்தில் தப்பிச் சென்றது ஏன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan