காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹைராத் நகர் டெலிகாம் வீதி, கடற்கரை வீதி,நூராணியா பிரதேசங்களில் நேற்றிரவு(06.06.2024) பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவரிடமிருந்து ஆறு போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
