இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 5 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், ராகமை வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.