இலங்கையில் ஐந்து மில்லியன் மக்கள் ஒற்றைத் தலைவலியினால் பாதிப்பு
இலங்கையில் ஐந்து மில்லியன் வரையான மக்கள் ஒற்றைத் தலைவலியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆசிய தலைவலி நிவாரண சங்கம்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன அண்மையில் ஆசிய தலைவலி நிவாரண சங்கத்தின் ஐந்தாவது தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு 24 நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அங்கு கருத்து வெளியிடும் போது அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தலைவலியைக் கண்டறியக் கூடிய இணைய செயலி
அத்துடன் இலங்கையில் தற்போதைக்கு ஒற்றைத் தலைவலியைக் கண்டறியக் கூடிய இணைய செயலி ஒன்றை வடிவமைப்பதிலும் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

அதற்காக அவரும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் கூட்டு முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri