புதுக்குடியிருப்பில் டெல்டா தொற்றாளர்கள் ஐவர் அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதில் வடமாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 5 பேரின் மாதிரிகளில் டெல்டா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸார் மற்றும் மூன்று பிரதேச வாசிகள் என ஐவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத மக்களாகவே புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் காணப்படுகின்றமை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
எனவே மக்கள் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.