வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஐவர் கைது (Photos)
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தைக் கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா - மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கெப் வாகனமொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தில், நிலத்தை ஆய்வு செய்வதற்குப் பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பியகமவை சேர்ந்த 4 பேரும், பிலியந்தலவை சேர்ந்த
ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்ததுடன்,
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





