மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் சட்டவிரோத பொருளுடன் ஐவர் கைது
காத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 பிரிவு பாலமுனை பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 1430 மில்லிக்கிராம், 490 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4250 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும், 24 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri