யாழ் - முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த ஐவர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்து வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவானர் குறித்த ஐவரையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நான்கு பேரும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.