பாக்கு நீரிணை பகுதியில் விபத்திற்குள்ளான இந்திய படகு
பாக்கு நீரிணைப் பகுதியில் இலங்கையின் கடற்படையினரின் கப்பல் மோதியதில் இந்திய கடற்றொழிலாளர்களின் படகொன்று சேதமடைந்துள்ளது.
எனினும் படகில் இருந்த கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் படகு கரைக்கு திரும்பி வருவதாகவும் படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பாரிய சேதம் ஏற்படவில்லை
படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாக்கு நீரிணைப் பகுதியில் படகு கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது , அந்த வழியாகச் சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் மோதியபோது படகின் மேற்பகுதி உடைந்துள்ளது.
எனினும் இதன்போது படகுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்று இந்திய தகவல்கள்
தெரிவிக்கின்றன.