யாழில் கடற்றொழிலுக்கு சென்ற கணவன்: வீடு திரும்பும் முன் மனைவிக்கு ஏற்பட்ட அவலம்
யாழ்ப்பாணம் (Jaffna) மருதங்கேணி தாளையடி பகுதியில், கணவன் கடற்றொழிலுக்கு சென்றிருந்த வேளை, வீட்டில் இருந்த மனைவி தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான ஜெகசீலன் சங்கீதா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளை, பெண் சுயநினைவின்றி வீட்டின் கழிவறை அருகே விழுந்து கிடந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
அதனையடுத்து, பருத்தித்துறை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையில், குறித்த பெண் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam