அநுரகுமாரவின் இந்திய விஜயத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள கடற்றொழிலாளர் பிரச்சினை
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய - இலங்கை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் அண்மையில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் வடபகுதியில் உள்ள மீன்பிடித் தொழிலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உடனடி தீர்வு
எனவே இரண்டு தரப்பினரும் இணக்கமாக உடனடி தீர்வு காண்பதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடல் எல்லையை அத்துமீறிச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
