வடமராட்சி - கிழக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் (video)
வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்து ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (17.02.2023) காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக வடமாட்சி கிழக்கில் ஒரு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வருகைதந்தும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதால் பிரதேசத்திலுள்ள சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மீனவர்கள், நீரியல் வளத் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், கடற்படை என்பன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலே குறித்த சுருக்குவலை தொழில் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் இதற்குக் குறித்த திணைக்களங்கள் துணை போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
