ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல்
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது குறித்த சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று காலை நபரொருவர் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் எமது பிரதேச செய்தியாளர் வினவிய போது, குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவரை உடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜி





அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam