ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல்
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது குறித்த சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று காலை நபரொருவர் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் எமது பிரதேச செய்தியாளர் வினவிய போது, குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவரை உடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜி











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
