ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல்
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது குறித்த சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று காலை நபரொருவர் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் எமது பிரதேச செய்தியாளர் வினவிய போது, குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவரை உடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜி







முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
