முல்லைத்தீவு - மல்லாவி குளத்தின் வாய்க்காலில் மீன்கள் உயிரிழப்பு (Photos)
முல்லைத்தீவு - மல்லாவி குளத்திலிருந்து செல்லும் வாய்க்காலில் இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையின் பல பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் முல்லைத்தீவின் பல நீர்நிலைகளில் நீரின்றி வரண்டுபோயுள்ள நிலைமையை காண முடிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர் வற்றிய நிலை
துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி குளத்தில் முற்றுமுழுதாக நீர் வற்றிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் குளத்திலிருந்து செல்லும் வாய்க்காலில் பெருமளவான மீன்கள் இறந்து போயுள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam