எரிபொருள் விநியோகத்தில் தேசிய ரீதியில் வவுனியா மாவட்டம் முதலாமிடம் (Photos)
தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தேசிய ரீதியில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முதலாமிடம் பெற்றுள்ளது.
நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாக தேசிய எரிபொருள் அட்டையை எரிசக்தி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிசக்தி அமைச்சு வரிசைப்படுத்தி உள்ளது.
தேசிய எரிபொருள் அட்டை பயன்பாடு
தேசிய எரிபொருள் அட்டையை சிறப்பாக பயன்படுத்திய எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜி.எச்.ஏ.டீ. சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை அனுராதபுரத்தில் உள்ள டபிள்யூ.எம்.டீ.கே.உயன்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையமும், மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள ஜெயபிரணவன் எரிபொருள் நிரப்பு நிலையமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் (Photos) |