அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka History of Sri Lanka Sri Lanka Parliament Election 2024
By Dharu Nov 21, 2024 10:12 AM GMT
Report

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பு இம்முறையும் இல்லாது போயுள்ளது.

10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

சபாநாயகர் தெரிவு

நாடாளுமன்ற செயலாளரின் அறிவிப்பின் பிரகாரம் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றதுடன், பிரதமரால் அதற்கான முன்மொழிவும் இடம்பெற்றது. இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளின்படி நடைபெற்றது.

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

பிரதமர் ஹரினி அமரசூரிய, கலாநிதி அசோக சபுமல் ரங்வல நியமனத்தை முன்மொழிந்தார் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை உறுதிப்படுத்தினார்.

முதலாவது அரசுப் பேரவையின் தலைவர்

இலங்கையின் வரலாற்றில் முதலாவது அரசுப் பேரவையின் தலைவராக  ஃபன்சிஸ் மொலமுரே தெரிவுசெய்யப்பட்டார்.

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

அதன் பின்னரான அரசுப் பேரவையின் தலைவராக எஃப். ஏ ஒபேசேகர நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை

அதனைதொடர்ந்து அரசுப் பேரவையானது பிரதிநிதிகள் சபையாக மாற்றப்பட்டு நாடாளுமன்ற முறை இலங்கையில் கொண்டுவரப்பட்டது.

இதன்படி இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற சபாநாயகராக  ஃபன்சிஸ் மொலமுரே தெரிவுசெய்யப்பட்டார்.

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

இவர், 14 ஒக்டொபர் 1947 தொடக்கம்  25 ஜனவரி 1951 வரை சபாநாயகராக செயற்பட்டார்.

பிரான்சிஸ் மொலமுறேயின் இறப்பினையடுத்து சேர் அல்பேட் எஃப் பீரிஸ் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்(13 பெப்ரவரி 1951 – 08 ஏப்ரல் 1952)

இதன்பின்னர், இரண்டாவது,  நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவராக மீண்டும் அல்பேட் எஃப் பீரிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.(09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956)

இதனை தொடர்ந்து, மூன்றாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக எச். எஸ். இஸ்மாயில், தெரிவுசெய்யப்பட்டார் (19 ஏப்ரல் 1956 - 05 டிசம்பர் 1959)

நான்காவது நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை ரி. பீ. சுபசிங்க பதவியேற்றார். (30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960)

ஐந்தாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக ஆர். எஸ். பெல்பொல பதவியேற்றார்.(05 ஆகஸ்ட் 1960 - 24 ஜனவரி 1964)

தொடர்ந்து, பெல்பொலவின் பதவி விலகலை ஹியூ. பர்னாந்து சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்( 24 ஜனவரி 1964 - 17 டிசம்பர் 1964)

மேலும். ஆறாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக அல்பேட் எஃப் பீரிஸ் தெரிவு செய்யப்பட்டார்(05 ஏப்ரில் 1965 - 21 செப்டெம்பர் 1967)

மேலும், அல்பேட் பீரிஸின் இறப்பையடுத்து சபாநாயகராகத் சேர்லி கொரயா தெரிவு செய்யப்பட்டார் (27 செப்டெம்பர் 1967 - 25 மார்ச் 1970

ஏழாவது நாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக ஸ்ரான்லி திலகரத்ன தெரிவானார்.(07 ஜூன் 1970 - 22 மே 1972)

புதிய சபாநாயகர் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தீர்மானம்!

புதிய சபாநாயகர் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தீர்மானம்!

தேசிய அரசப் பேரவை

இதனை தொடர்ந்து இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்ளுக்கு அமைவாக நாளுமன்றம் பிரதிநிதிகள் சபையானது, தேசிய அரசப் பேரவையாக மாற்றம் பெற்றது.

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

இதன்படி அதன் முதல் தலைவராக(சபாநாயகர்)  ஸ்ரான்லி திலகரத்ன தெரிவுசெய்யப்பட்டார். (07 ஜூன் 1970 - 22 மே 1972)

மேலும், இரண்டாவது தேசிய அரசப் பேரவையின் சபாநாயகராக  கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் தெரிவானார்(07 செப்டெம்பர் 1978 - 13 செப்டெம்பர் 1978)

இதனை தொடர்ந்தே 1977ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் மாற்றத்தின் பிரகாரம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது நாடாளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்றம்

இதன்படி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது நாடாளுமன்ற சபாநாயகராக கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் தெரிவானர்(07 செப்டெம்பர் 1978 - 13 செப்டெம்பர் 1978)

இதன்பின்னர், ஆனந்த திஸ்ஸ த அல்விஸின் பதவி விலகலை தொடர்ந்து, எம். ஏ. பாக்கீர் மாக்கர் சபாநாயகராக தெரிவானர்.(21 செப்டெம்பர் 1978 - 30 ஆகஸ்ட் 1983)

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

தொடர்ந்து, பாக்கீர் மாக்காரின் பதவி விலகலை தொடர்ந்து, சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்( 06 செப்டெம்பர் 1983 - 20 டிசம்பர் 1988)

இதன்படி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சபாநாயகர்களாக பின்வருவோர் பதவி வகித்துள்ளனர்.

இரண்டாவது நாடாளுமன்ற சபாநாயகராக எம். எச். மொஹமட் (09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994)

மூன்றாவது நாடாளுமன்ற சபாநாயகராக கே. பீ. ரத்நாயக்க (தேசிய பட்டியல்) தெரிவு செய்யப்பட்டார் (25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000) (14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000

நான்காவது நாடாளுமன்ற சபாநாயகராக அநுர பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டார்(8 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001) இவர் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் எதிர்க்கட்சி உறுப்பினராவார்.

சபாநாயகராகர் தெரிவு

ஐந்தாவது நாடாளுமன்ற சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்( (19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004)

ஆறாவது நாடாளுமன்ற சபாநாயகராக டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தெரிவு செய்யப்பட்டார்.( 22 ஏப்ரல் 2004 - 09 பெப்ரவரி 2010)

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு | First Parliamentary Proceedings Of The Anura Govt

(ஐக்கிய தேசிய முன்னணியைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான டி. யூ. டப்ளியூ. குணசேக்கர பெற்ற 109 வாக்குகளுக்கெதிரான 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.(நாடாளுமன்ற வாக்கெடுப்பு)

ஏழாவது நாடாளுமன்ற சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். (22 ஏப்ரில் 2010 - 26 ஜுன் 2015)

எட்டாவது நாடாளுமன்ற சபாநாயகராக கரு ஜயசூரிய (தேசிய பட்டியல்) தெரிவு செய்யப்பட்டார்.( செப்டெம்பர் 2015 - 02 மார்ச் 2020)

ஒன்பதாவது நாடாளுமன்ற சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனதெரிவு செய்யப்பட்டார்(2020 - 2024)

தற்போது, 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US