இலங்கை - ரஷ்யா இடையிலான நேரடி விமான சேவை
ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நேரடி விமானமான அஸூர் ஏர் இன்று (01.11.2023) காலை 332 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானம் நீர் பீரங்கி வணக்கங்களுடன் முதலில் வரவேற்கப்பட்டு, பின்னர் விமானத்தில் வந்திருந்த பயணிகள் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
நேரடி விமான சேவை
இன்று முதல் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அஸூர் ஏர் நிறுவனம் ரஷ்யாவின் வெனுகோவ், டோல்மோசேவ், கிரானோயார்ஸ்க் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கொழும்பில் நிதி அமைச்சை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டம்! முன்னேற முற்படும் போராட்டக்காரர்கள் - தயார் நிலையில் பொலிஸார்(Video)

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
