மட்டக்களப்பில் மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சந்திவெளியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நேற்று மாலை (21.03.2024) இந்த மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ரைட் டு லைப் (Right to life) நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிலிப் திஷாநாயக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மேலும், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் பணிப்பாளர் வ.றமேஸ் ஆனந்தன், ரைட் டு லைப் அமைப்பின் இணைப்பாளர் பிரசாந்தன், திட்ட முகாமையாளர் மதுசாலினி மற்றும் சர்வமதத்தலைவர்கள் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |