மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீப்பரவல்
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இத் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
தீக்கட்டுப்பாடு
மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரைக் கொண்டு அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை, மேசை, ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam