மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீப்பரவல்
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இத் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
தீக்கட்டுப்பாடு
மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரைக் கொண்டு அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை, மேசை, ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
