தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அச்சுவேலி பிராந்திய காரியாலயத்தில் தீ விபத்து
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அச்சுவேலி பிராந்திய காரியாலயத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தெங்கு அபிவிருத்தி சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நீர் இறைக்கும் உபகரணங்கள் முற்றாக தீயில் கருகி உள்ளதுடன், 8 தென்னை மரங்களும் எரிந்து தீயில் கருகியுள்ளன.
இந்நிலையில்,அச்சுவேலி பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீக்காண காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,யாழ்ப்பாணம் தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.